குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் : மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பன் சத்திரம் கிராமத்தில், குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த காட்டு யானைகளால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் : மக்கள் பீதி
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பன் சத்திரம் கிராமத்தில், குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த காட்டு யானைகளால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். வனப்பகுதியிலிருந்து 3 யானைகள் ஒரு குட்டியுடன் நஞ்சப்பன்சத்திரம் பகுதிக்குள் புகுந்ததது. தகவலறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகளை கிராமத்திற்குள் வராமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்