சென்னை மெரினா சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு திறப்பு விழா நடத்த தடை

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை மெரினா சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு திறப்பு விழா நடத்த தடை
x
* நெடுஞ்சாலைத்துறை விதிகளை மீறி சென்னை காமராஜர் சாலையில்  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதாகவும், அதற்கு தடை விதிக்க கோரி கோரியும் வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

* இது தொடர்பாக நீதிபதி சத்யநாரயணன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படுவதாக கூறினார். 

* அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எவ்வளவு செலவிடப்படுகிறது என கேள்வி எழுப்பியனர். அதற்கு, 2 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படுவதாக  தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். 

* இதையடுத்து, பல்வேறு திட்டங்களுக்காக ஆர்ஜிதம் செய்த நிலங்களுக்கு 845 கோடி ரூபாய் வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்குகளை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இதற்கு வட்டியாக பொது மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவதாக கண்டனம் தெரிவித்தனர்.  
 
* இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள் அதன்  திறப்பு விழாவுக்கு தடை விதித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதோடு,  வழக்கு விசாரணையை ஜனவரி 21ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். 




Next Story

மேலும் செய்திகள்