ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை

கைசிக ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலிருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை
x
கைசிக ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலிலிருந்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது. திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், மற்றும் பட்டாச்சாரியார்கள் எடுத்து வந்த மங்கலப்பொருட்கள், அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமனிடம் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக வஸ்திரப் பொருட்கள், கோயில் யானை மீது வைத்து உள்பிரகாரத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்