வைகை ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
x
வைகை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே 3 ஆயிரம் கன அடி  தண்ணீர்  திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது கனமழையால் மஞ்சளாறு மற்றும் வரகுமா நதி  ஆறுகளில் இருந்து 9 ஆயிரம் கன அடி தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மதுரை ஆட்சியர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வைகை ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ கூடாது என மதுரை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்