மணல் கடத்த முயற்சி - 2 லாரி ஓட்டுநர்கள் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இருந்து சட்ட விரோதமாக கேரளாவில் மணல் கடத்த முயன்ற லாரிகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இரண்டு ஓட்டுநர்களை கைது செய்தனர்.
கைதானவர்கள், தக்கலையை சேர்ந்த விக்டர், நெல்லை மாவட்டம் டோனாவூர் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பது விசாரணையில் தெரியவந்தது. மணல் கடத்தல் பின்னணி குறித்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story