மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை : 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை : 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
x
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  செய்யாறை அடுத்த வடசின்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமானந்தம். கூலித்தொழிலாளியான இவர், மதுபோதையில் தனது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பரமானந்தத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 8 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நடராஜன் தீர்ப்பு அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்