மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்கள் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரியும் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இது குறித்து வாதிட நிர்மலா தேவி வழக்கறிஞர் அவகாசம் கேட்ட நிலையில். அதை ஏற்க மறுத்த நீதிபதி வரும் 15 ஆம் தேதி 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
Next Story