டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் - சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் - சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
* டெங்கு, பன்றிக் காய்ச்சல்களை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதார துறைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* போர்க்கால அடிப்படையில்  டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கவும், அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும் போதுமான மருந்து மாத்திரைகள், சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்க கோரி, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை
மற்றும் அரசு எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை குறித்து வரும் 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சுகாதார துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்