பள்ளிப் பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாறு..

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்கை வரலாறு ,அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்தில் சேர்க்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிப் பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாறு..
x
* பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை, பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக, ஆறாம் வகுப்பு புத்தகத்தில், அவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற்றிருந்ததாகவும், 

* ஆனால் அது தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகவும், அதுகுறித்து அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சங்கிலி என்பவர், மனு தாக்கல் செய்திருந்தார்.

* இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. 

* அப்போது, அடுத்த கல்வியாண்டு முதல் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முத்துராமலிங்க தேவரின் வரலாறு சேர்க்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்