ரூ.35 லட்சம் மோசடி - போலி வழக்கறிஞர் கைது

நாமக்கலில் 35 லட்சம் ரூபாய் ஏமாற்றிய போலி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.35 லட்சம் மோசடி - போலி வழக்கறிஞர் கைது
x
* ராசிபுரம் அருகே கால்நடை உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், சதாசிவம்.  இவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு 55 லட்ச ரூபாய் கடனாக பெற்ற பாஸ்கரன் என்பவர் பணம் தர மறுத்ததால், அவர் மீது வழக்கு தொடர சதாசிவம் முடிவு செய்துள்ளார்.

* இந்நிலையில், வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர்,தாம்  உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்றும்பணத்தை வழக்கு தொடர்ந்து வட்டியுடன் மீட்டு தருவதாக கூறி சதாசிவனிடம் 35 லட்சம் வரை வசூலித்துள்ளார்.

* இந்நிலையில்  பணம் குறித்து கேட்ட,சதாசிவத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில், போலி வழக்கறிஞரான வின்ஸ்டன் சர்ச்சிலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்