கோட்டக்குப்பம் கடலில் கரை ஒதுங்கிய காதலர்கள் உடல்

புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்குப்பம் கடலில் மூழ்கிய காதலர்களின் உடல் முதலியார்சாவடி அருகே கரை ஒதுங்கியுள்ளது.
கோட்டக்குப்பம் கடலில் கரை ஒதுங்கிய காதலர்கள் உடல்
x
புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்குப்பம் கடலில் மூழ்கிய காதலர்களின் உடல் முதலியார்சாவடி அருகே கரை ஒதுங்கியுள்ளது. டெல்லியை சேர்ந்த எனாங்கி மற்றும் பஞ்சாபை சேர்ந்த அன்சுல் அவஸ்தி, ஆகிய இருவரும் காதலர் என்றும், இருவரும் நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் கடற்கரை வந்ததாக கூறப்படுகிறது. கடலில் குளித்து கொண்டிருந்த போது இருவரும் மாயமாயினர். இந்நிலையில், முதலியார் சாவடி கடற்கரையில் அன்சுல் அவஸ்தி உடலும் சற்று தொலைவில் எனாங்கியின் உடலும் கரை ஒதுங்கின. உடல்களை மீட்ட, கடலோர காவல் படை வீரர்கள் கோட்டக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்