டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம் : ஒரே நாளில் ரூ. 100 கோடிக்கு மது விற்பனை?

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடைகளில், அலைமோதினர். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், தீபாவளியை நண்பர்களுடன் கொண்டாடிய பலர், டாஸ்மாக் கடைகளில் விருந்து கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம் : ஒரே நாளில் ரூ. 100 கோடிக்கு மது விற்பனை?
x
தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடைகளில், அலைமோதினர். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், தீபாவளியை நண்பர்களுடன் கொண்டாடிய பலர், டாஸ்மாக் கடைகளில் விருந்து கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சென்னை மாநகரின் பல்வேறு மதுக்கடைகளிலும் வழக்கத்தை விட, தீபாவளி நாளான இன்று, கூட்டம் அதிகமாக இருந்தது. 

இதேபோல, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை என மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இன்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் வசூல், 100 கோடி ரூபாய் அளவுக்கு எட்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுஉள்ளது.  தீபாவளி விடுமுறை நாளில் 3 நாட்களில் மட்டும் 320 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய. டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்