உயர் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பதவியேற்பு : தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்

உயர் நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பதவியேற்பு : தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
உயர்  நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பதவியேற்பு : தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
x
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் டீக்காராமன், சதீஷ்குமார், சேஷசாயி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2016ஆம் ஆண்டு  நவம்பர் 9ஆம் தேதி முதல் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர், உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, நேற்று மாலை மூவரும் பதவியேற்றனர். தலைமை நீதிபதியின் அறையில் நடைபெற்ற எளிய விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்