மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் : கொட்டும் மழையிலும் போராட்டம்

மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் : கொட்டும் மழையிலும் போராட்டம்
மதுக்கடையை மூடக்கோரி போராட்டம்  : கொட்டும் மழையிலும் போராட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி காட்டுவிளை பகுதியில் மதுக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே இடத்தில் ஓராண்டுக்கு முன்பு பொது மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தால் அங்கிருந்த மதுக்கடை மூடப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்,  கொட்டும் மழையிலும் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் .

Next Story

மேலும் செய்திகள்