பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை கடத்தல்

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது.
பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை கடத்தல்
x
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. சிதம்பரம் அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த சந்திரிகா என்பவர் தனது 4 மாத பெண் குழந்தையுடன் சிதம்பரம் வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடத்திற்கு சந்திரிகா சென்றபோது, குழந்தையை பார்த்துக் கொள்வதாக அவரிடம் ஒரு பெண் கூறியுள்ளார். சந்திரிகா திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தையுடன் அந்த பெண் மாயமாகி விட்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை இருப்பதாக தகவல் கிடைத்தது.   குழந்தையை மீட்டு சந்திரிகாவிடம் ஒப்படைத்த போலீசார்,  கடத்திச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்