சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்பு பண வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து -  உயர்நீதிமன்றம் உத்தரவு
x
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்கா, லண்டனில் உள்ள சொத்துகளை வருமான வரித்துறையின் கணக்கில் இருந்து மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர்கள் மீது கருப்பு பண சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில்,  அந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி சிதம்பரம் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எழும்பூர் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்