ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ₨4,000 பறிமுதல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ₨4,000 பறிமுதல்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் எல்எல்ஆர், மற்றும் லைசன்ஸ்ஆகியவைக்கு முறையாக  ரசீது போடப்படுகிறதா, கணக்கு வழக்குகள் குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத 4 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 24 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மயிலாடுதுறையில் குறைந்த அளவில் பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்