"விரைவில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்" - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
விரைவில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தகவல்
x
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் ரங்கராஜன் , ஜேக்டோ ஜியோவில் மீண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இணைந்து உள்ளதாக தெரிவித்தார். தற்போது இரண்டாக உள்ள ஜாக்டோ ஜியோவும் விரைவில் இணையப் போகிறது என்றும், இதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் ரங்கராஜன் கூறினார். அரசு ஊழியர்- ஆசிரியர்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை உடனே அரசு நிறைவேற்ற, விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்