மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...

சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...
x
சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது பற்றி நவீஷா பானு அண்ணாசாலை மகளிர் காவல் நிலையத்தில் 23-ம் தேதி புகார் கொடுத்ததுடன், லத்துராம் தெருவில் உள்ள தந்தையுடன் சென்று வசித்து வருகிறார்.  நேற்று  முஸ்தாக் பாட்ஷா மனைவியை பார்க்க சென்ற , மனைவி நவிஷா பானு கதவையே திறக்கவில்லை என கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்து பாட்ஷா, அங்கேயே உடலில், மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். 94 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாட்ஷா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  


Next Story

மேலும் செய்திகள்