"பட்டாசு வெடிக்கும் நேரம் : ஆலோசித்து முடிவு" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
தீபாவளி நாளில், பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தீபாவளி நாளில், பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரை- விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பான அறிவிப்பை, அரசு விரைவில் வெளியிடும் என்றார். பட்டாசு வழக்கில், மிகப்பெரிய வழக்கறிஞர்களை வைத்து, வாதிடியதாக அவர் குறிப்பிட்டார். பட்டாசு உரிமையாளர், தொழிலாளர் நலன் பாதிக்கப்படக்கூடாது என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Next Story