சாலையோரம் நின்றிருந்த புலி : வாகன ஓட்டிகள் அச்சம்- கிராம மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூட்டாடா கிராமம் ஒன்னட்டி சாலையில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையோரம் நின்றிருந்த புலி : வாகன ஓட்டிகள் அச்சம்- கிராம மக்கள் பீதி
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே  கூட்டாடா கிராமம் ஒன்னட்டி சாலையில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சமடைந்தனர்.  சாலையோரம் நீண்ட நேரம் நின்றிருந்த அந்த புலி, பின்னர் அங்குள்ள தேயிலை ‌தோட்டத்திற்குள் புகுந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், அச்சமடைந்துள்ளனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்