5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர் - கர்ப்பிணிகள் அவதி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடியில் தமிழக அரசு சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர் - கர்ப்பிணிகள் அவதி
x
மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடியில் தமிழக அரசு சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், காலை 10 மணிக்கு வந்து காத்திருந்தனர். ஆனால், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  5 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். இதனால், கர்ப்பிணிகளும், அவர்களது பெற்றோர்களும் காக்க வைக்கப்பட்டனர். மாலை நெகிழ்ந்த நிலையில், கர்ப்பிணி பெண்கள், நீண்ட நேரம் நாற்காலியில் உட்கார்ந்திருந்ததால், அவதிக்குள்ளாயினர்.


Next Story

மேலும் செய்திகள்