கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பார்த்த ஸ்கேன் மையம் சீல்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து தெரிவித்த தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து தெரிவித்த தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். எடப்பாடி அம்மன் நகரில் செயல்பட்டு வரும் அரவிந்த் மருத்துவமனை கருவிலுள்ள குழந்தையை ஸ்கேன் செய்து ஆணா, பெண்ணா என்பதை கூறுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, சுகாதாரத் துறை கண்காணிப்பாளர் தாமஸ் பிரபாகரன், கமலக்கண்ணன், இணை இயக்குநர் சத்யா, எடப்பாடி தலைமை மருத்துவர் மோகன், எடப்பாடி வட்டாட்சியர் கேசவன், காவல் துறை ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, புகார் உறுதி செய்யப்பட்டது.
Next Story