பண்டிகை சீசன் எதிரொலி - தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலை கடந்த 1 மாதத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது
பண்டிகை சீசன் எதிரொலி - தங்கம் விலை உயர்வு
x
* இந்தியாவில் பண்டிகை சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து தங்கத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. 

* தேவை அதிகரித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இம்மாத துவக்கத்தில் 2 ஆயிரத்து 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் தற்போது 3 ஆயிரத்து 52 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

* அதன்படி,  தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 96 ரூபாய் அதிகரித்து 24 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே காலத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 41 ரூபாய் 70 காசுகளாக உள்ளது.

* தீபாவளி பண்டிகை மற்றும் தொடர்ந்து வரும் திருமண சீசன் ஆகிய காரணங்களால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவி்த்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்