போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை

சென்னையில், போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடைவிதிக்க, போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறிய சுமார் 60 ஆயிரம் பேரின் லைசென்ஸ்களுக்கு தடை
x
* சென்னையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

* அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக இரண்டாயிரத்து 917 பேர் மீதும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பத்தாயிரத்து 651 பேர் மீதும், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதாக ஒன்பதாயிரத்து 664 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

* போலீஸ் இல்லை என்பதை அறிந்து, சிக்னலை மதிக்காமல் சென்ற 29 ஆயிரத்து 32 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

* இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறிய 61 ஆயிரத்து 504 பேரின் லைசன்ஸ்களுக்கு தற்காலிக தடை விதிக்க ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு, சென்னை போக்குவரத்து காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்