இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது - ஆற்காடு நவாப்

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின் சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது - ஆற்காடு நவாப்
x
* மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி காந்தியின்  சிந்தனைகளும், சாதனைகளும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. 

* இந்த கருத்தரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆற்காடு நவாப்  ஆகியோர் கலந்துகொண்டனர். 

* விழாவில் பேசிய ஆளுநர், மகாத்மா காந்திக்கும் தமிழ்நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சுதந்திரத்திற்காகவும், தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர் காந்தி என்று கூறினார். 

* பின்னர் பேசிய ஆற்காடு நவாப்,  இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக சிலர் கருதுவதாக கவலையோடு கண்ணீர் மல்க பேசினார். 

* இஸ்லாம் அமைதி மட்டுமே போதிக்கிறது என்றும், இந்தியாவில் மதத்தை வைத்து யாரையும் பிரிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்