சாலை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? - நீதிபதிகள் கேள்வி

நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாலை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? - நீதிபதிகள் கேள்வி
x
நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பா.ம.க. எம்.பி. அன்புமணி , விவசாயிகள், நில உரிமையாளர்கள் என  பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு  மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகள் அமைப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலை முறையினர் சாப்பிட கற்களும், மணல்களும் மட்டுமே மிஞ்சும் என்றும் வேதனை தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்