நாட்டு பட்டாசு வெடித்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில், அனுமதியின்றி நாட்டு பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
நாட்டு பட்டாசு வெடித்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு
x
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள மதீன் என்பவரின் வீட்டில் அனுமதியின்றி நாட்டு பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
அந்த வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியதில், வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.   தீ விபத்தில், 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாயின. இதனிடையே, தகவல் அறிந்ததும் அமைச்சர் பெஞ்சமின், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து, நேரில் ஆறுதல் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்