சினிமா துறையில் நேர்மையும், பெண்களுக்கு மரியாதையும் இருக்கும் நிலையை காணவே விருப்பம் - ஏ.ஆர்.ரகுமான்

பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்கள் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் நேர்மையும், பெண்களுக்கு மரியாதையும் இருக்கும் நிலையை காணவே விருப்பம் - ஏ.ஆர்.ரகுமான்
x
* பாலியல் புகாரில் சிக்கியவர்களின் பெயர்கள் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

* அவரின் டிவிட்டர் பதிவில்,  சினிமா துறையில் நேர்மையும், பெண்களுக்கு மரியாதையும் இருக்கும் நிலையை காணவே தாம் விரும்புவதாக  தெரிவித்துள்ளார். 

* மீடு வில்  பாலியல் புகார் தெரிவிப்பவர்களின் பெயர்களும், குற்றச்சாட்டுக்கு உள்ளாவோரின் பெயர்களும் தமக்கு அதிர்ச்சியை அளிப்பதாக    குறிப்பிட்டுள்ளார். 

 * சாதிக்க வருவோருக்கு  எந்த இடையூறும்  ஏற்படாத சூழலை உருவாக்க தாமும் தமது குழுவினரும் உறுதியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை  சமூக வலைதளம்  கொடுத்தாலும், 

* அது தவறாக கையாளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்