தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்
x
சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன், கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன், நேற்று ஆலோசனை நடத்தினார்.  அந்த கூட்டத்தில் பங்கேற்ற தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு தினகரனிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது.ஆனால், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைவரும் குற்றாலத்தில் தங்கியிருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து வெற்றிவேல் தவிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்ற எம்.எல்.ஏ.க்கள்  குற்றாலம் புறப்பட்டு செல்ல உள்ளனர். வழக்கில் நல்ல தீர்ப்பு வரவேண்டி புஷ்கரவிழாவில் பங்கேற்க தாங்கள்  செல்ல இருப்பதாகவும்  தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்