ரூ.4.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரின் அடையாளம் தெரிந்தது

சென்னையில் உயர்ரக வாகனத்தை திருடிச் சென்றவரின் அடையாளம் தெரியவந்ததையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.4.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரின் அடையாளம் தெரிந்தது
x
சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அப்துல் அப்ரீன் என்ற இளைஞர் தன்னிடம் இருந்த நாலரை லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை ஆன்லைன் மூலம் விற்க முயன்றார். அப்போது அவரை நூதன முறையில் ஏமாற்றிய இளைஞர் ஒருவர் ஆட்டோ ஓட்டுநர் சேகர் என்பவரை பணயமாக வைத்து விட்டு வாகனத்தை கடத்திச் சென்றார். இந்த நிலையில் அப்துல் அப்ரீனை ஏமாற்றிச் சென்ற இளைஞரின் முகம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஊதா வண்ணத்தில் சட்டை அணிந்த அவர், இருசக்கர வாகனம் ஒன்றில் செல்வது போன்ற காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை வைத்து அந்த இளைஞரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்