15 கிலோ கட்டியுடன் அவதிப்படும் மூதாட்டி

மேல்மலையனூர் அருகே காலில் 15 கிலோ கட்டியுடன் வேதனைப்படும் மூதாட்டி, தமக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
15 கிலோ கட்டியுடன் அவதிப்படும் மூதாட்டி
x
* விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள  கோட்டை பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  70 வயதான  கன்னியம்மாள் . 

*  இவருக்கு  இடது காலில் சிறிதாக வளரத்தொடங்கிய கட்டி, நாளடைவில் வளர்ந்து வளர்ந்து தற்போது 15 கிலோ எடையளவுக்கு பெருகிவிட்டது.

 * இதனால் இவரால் வெளியில் எங்கும் செல்ல முடிவதில்லையாம். அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை கூட தமக்கு வருவதில்லை என்கிறார்.

* இதற்காக பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை என வேதனைப்படுகிறார்.
உறவினர்களும் பெரிதாக இவரை கண்டுகொள்ளததால், பண ரீதியாக கஷ்டப்படுகிறார்.

* தமது கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும், உதவித்தொகை கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னயம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்