ஆயுத பூஜை : சாமந்தி பூக்களை பறிக்கும் பணி தீவிரம்

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சாமந்தி பூக்கள் பறிக்கும் பணி தருமபுரி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆயுத பூஜை : சாமந்தி பூக்களை பறிக்கும் பணி தீவிரம்
x
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி சாமந்தி பூக்கள் பறிக்கும் பணி தருமபுரி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது செடிகள் பூக்கள் பூத்துக்குலுங்கும் நிலையில், ஆயுத பூஜை பண்டிகைக்காக அவற்றை பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழையினால் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும், ஒரு கிலோ பூ, 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்