புழல் சிறையில் மீண்டும் பரபரப்பு : கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல்

புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறையில் மீண்டும் பரபரப்பு : கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல்
x
புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை கைதிகள் இருக்கும் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது  கும்மிடிப்பூண்டி பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கடந்த மாதம்  கைது செய்யப்பட்ட பரத் என்பவரிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, மற்றும் 2 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்