சென்னையில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் 17 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
x
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் 2 பேரும், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் 8 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக
தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை  உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கவேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்