டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழப்பு : அரசு மருத்துவமனை மீது புகார்

சென்னை மணலியில் டெங்கு காய்ச்சலால் நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழப்பு : அரசு மருத்துவமனை மீது புகார்
x
சென்னை மணலியில் டெங்கு காய்ச்சலால் நான்காம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்தார். கூலித்தொழிலாளி சரவணனின் 9 வயது மகன் கவியரசனுக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு மாதவரம் பால்பண்ணை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் ஆனால் மருத்துவர்கள் ரத்த மாதிரி எடுத்து சாதாரண காய்ச்சல் என சிகிச்சை அளித்துள்ளனர் ஆனால் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் வேதனையடைந்த சரவணன் மகன் கவியரசனை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார் ஆனால் ரத்த மாதிரியில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி இருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து கவியரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .


Next Story

மேலும் செய்திகள்