அய்யா வைகுண்ட கோயில் தேர்த்திருவிழா : தொடங்கி வைத்தார் தமிழிசை
சென்னை மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
சென்னை மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் , சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதனையடுத்து அய்யா உண்டு என்ற நாமத்தை பாடியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் . அய்யா வைகுண்ட தர்மபதி அமைந்த இடங்களிலேயே மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பை பெற்ற மணலி புதுநகர் பெற்றிருப்பதால் வெளி மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர் .
Next Story