தலைமை செயலரிடம் மனு கொடுக்க வந்த விவசாயிகள் அனுமதி மறுப்பு

தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
தலைமை செயலரிடம் மனு கொடுக்க வந்த விவசாயிகள் அனுமதி மறுப்பு
x
தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுவாமிமலை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். இந்த நிலையில் சாமி தரிசனம் முடித்து திரும்பி வரும் போது அவரிடம் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு 350 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், விவசாயிகளை, கும்பகோணம் திட்ட அலுவலகத்துக்கு சென்று மனு கொடுக்க அறிவுறுத்தினர். அங்கேயும் மனுக்களை பெற்றுக் கொள்ளாததையடுத்து விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்