சென்னை கடற்கரையில் புதுமண தம்பதி மீது தாக்குதல் - நகை, செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர்கள்

சென்னை கடற்கரையில், புதுமண தம்பதியை தாக்கிவிட்டு நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
சென்னை கடற்கரையில் புதுமண தம்பதி மீது தாக்குதல் - நகை, செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர்கள்
x
திருமணம் முடிந்து 25 நாட்கள் ஆன நிலையில் பல்லாவரத்தை சேர்ந்த கதிரவன், தனது மனைவி அனிதாவுடன் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்துள்ளார். கணவர் கண்களை துணியால் கட்டிவிட்டு இருவரும் கண்ணாமூச்சி விளையாடியபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், கதிரவனை கம்பியால் தாக்கிவிட்டு, அனிதா அணிந்திருந்த 12 சவரன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். 

இது குறித்து,  கட்டுப்பாட்டு அறைக்கு அனிதா அளித்த தகவலின்பேரில், விரைந்து வந்த போலீசார் கதிரவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்