விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
x
விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு குடி போதையில் நோயாளியை பார்க்க வந்த நபரை மருத்துவமனைக்குள் அனுமதிக்க பாதுகாவலர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மற்றும் உடன் வந்த 5 பேர் பாதுகாவலர் மற்றும் செவிலியரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதனை கண்டித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்