கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் தனியார் நிறுவன ஊழியர் கொலை

மணலி அருகே வீட்டு வாசலில் கஞ்சா அடித்ததைக் தட்டிக் கேட்டதால், தனியார் நிறுவன ஊழியரை கொன்றதாக, கைதான கொலையாளி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா அடித்ததை தட்டிக் கேட்டதால் தனியார் நிறுவன ஊழியர் கொலை
x
மணலியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோபால், நேற்று காலை வீட்டின் வாசலில் படுகொலை செய்யப்பட்டார். அங்கு சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகள் உதவியுடன், 23 வயது இளைஞர் ராஜசேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டு வாசலில் கஞ்சா அடித்ததை கோபால் தட்டிக் கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானதாக கொலையாளி கூறியுள்ளார். இதனால் பழிவாங்கும் நோக்கத்தோடு, கடந்த இரு தினங்களாக கண்காணித்து வந்ததாகவும், வீட்டு வாசலில் அமர்ந்து கோபால் செய்தி தாள் படித்து கொண்டு இருப்பதை கண்டவுடன் ஆத்திரம் அதிகமாகி அரிவாளை எடுத்து வந்து வெட்டியதாகவும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்