9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தில் ஓட்டுநர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்ஸோ சட்டத்தில் ஓட்டுநர் கைது
x
* கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த டெம்போ ஓட்டுநர் கிஷோர்குமார் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

* நேற்று கடனை வசூலிக்க வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆனந்தனின் 9 வயது மகளை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருப்பதாகவும், அதை வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார். 

* இதையடுத்து, சிறுமியிடம் விசாரித்தபோது, அவர் தனியாக இருந்தபோது ஆபாச படங்களை கிஷோர் குமார் எடுத்தது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவ் செய்த குளச்சல் போலீசார், கிஷோர்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்