பழனி கோயிலில் ரூ.1.50 கோடி உண்டியல் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியலில், 16 நாட்களில் ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை சேர்ந்துள்ளது.
பழனி கோயிலில் ரூ.1.50 கோடி உண்டியல் காணிக்கை
x
* பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியலில், 16 நாட்களில் ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை சேர்ந்துள்ளது. 

* கோயிலின் உண்டியல்கள் நிரம்பியதை தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையில் எண்ணப்பட்டன. 

* அப்போது, ஒரு கோடியே 54 லட்சத்து 13 ஆயிரத்து 570 ரூபாய் ரொக்கப்பணம் இருந்தது. இது தவிர, 514 கிராம் தங்கம், 7 கிலோ 100 கிராம் வெள்ளி நகைகளும் காணிக்கையாக போடப்பட்டிருந்தன. 

* மேலும், மலேசியா, பஹ்ரைன், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 414 கரன்சி நோட்டுகளும் உண்டியலில் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்