மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...
x
பாலிகாடு பகுதியை சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தந்தையான அருள்குமார், பணி இழந்ததால் வேறு வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை எதுவும் கிடைக்காததால், மதுவில் விஷம் கலந்து குடித்ததாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அருள்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஓமலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்