தூத்துக்குடியில் குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 18 குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார் -  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
நேற்று தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில், தூய்மைப் பணியை மேற்கொண்ட ஆளுநர், பின்னர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாங்கப்பட்டுள்ள 18 குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார். அங்கிருந்து சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அங்கிருந்த மாணவர்களை சந்தித்து, தூய்மை இந்தியா திட்டம் குறித்து விளக்கிக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்