புஷ்கரம் விழா : தமிழக ஆளுநருக்காக 2 முறை ஏற்றப்பட்ட தீபம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால், புரோகித்துக்காக, தாமிரபரணி புஷ்கரம் விழாவில் தீபஆரத்தி இரண்டு முறை ஏற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
புஷ்கரம் விழா : தமிழக ஆளுநருக்காக 2 முறை ஏற்றப்பட்ட தீபம்
x
நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் பகுதியில் நடைப்பெற்ற, புஷ்கரம் விழாவில் 16 தட்டுக்களில் தீபம் ஏற்றப்பட்டு காட்டப்பட்டது. ஆனால், விழா குழுவினர் அதனை அவசர அவசரமாக அணைத்தனர்.  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விழாவில் பங்கேற்றதால், அவருக்காக, மீண்டும் தீபம் ஏற்றிக் காட்டப்பட்டது. முதல் நாள் நிகழ்வின் போது, ஆளுநருக்காக, தீப ஆராதனை அணைக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்