உலக பெண் குழந்தைகள் தின விழா : பள்ளி குழந்தைகளுக்கு பூரண கும்ப மரியாதை
உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
* உலகம் முழுவதும், அக்டோபர் 11ஆம் தேதி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் உலக பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவிகளுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் ஆரத்தி எடுத்தும், நெற்றியில் திலகமிட்டும் வாழ்த்தினர். தொடர்ந்து, பெண் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு பாடுபடவும், அவர்களுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Next Story