ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கு : 'நக்கீரன்' ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு

ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில், நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கு : நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் மனு
x
ஆளுநர் அலுவலகம் அளித்த புகார் மீதான வழக்கில், நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் அலுவலகம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, கடந்த 8ம் தேதி கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்ததால், அன்று மாலையே விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நக்கீரன் பத்திரிகையின் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்