நள்ளிரவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு - 3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் என புகார்

3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் செய்ததாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது புகார்.
நள்ளிரவில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு - 3 இளைஞர்கள் மூலம் பணம் வசூல் என புகார்
x
திருச்சி சமயபுரம் அருகே டோல்கேட் ரவுண்டானா பகுதியில், லால்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி நேற்றிரவு வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தார். அவருடன் 3 இளைஞர்களும் டார்ச்லைட் வைத்து கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். 

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அந்த இளைஞர்கள் யாரென தெரியாது என சத்திய மூர்த்தி கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட எல்லையை தாண்டி தணிக்கை என்ற பெயரில் சத்தியமூர்த்தி கட்டாய பணம் வசூல் செய்வதாக லாரி ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்