பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை நீக்க வேண்டும் - அனந்த கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, கல்வியாளர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.
சென்னை - ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள்
அனந்த கிருஷ்ணன், அவ்வை நடராஜன், மன்னர் ஜவஹர், பொன்னவைக்கோ, திருவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கல்வியாளர்கள், முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி உயர்கல்வித்துறைக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன், துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு விசாரணைக்குழு அமைக்க வேண்டும்
என கேட்டு கொண்டார்
Next Story